அம்மான் பச்சரிசி – மரு நீக்கி மூலிகை, மருத்துவ குணங்கள் மற்றும் வீட்டுச் சிகிச்சைகள்
ஒரு நாள், நான் என் நண்பரின் விவசாய நிலத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, நிலத்தில் காட்டுத்தனமாக வளர்ந்த ஒரு சிறிய செடியைக் கவனித்தேன். அது ஒரு சாதாரண களை போல இருந்தது, அங்கு வேலை செய்யும் நபரிடம், பண்ணை வீட்டின் அழகைக் கெடுக்கும் அந்த களைகளை ஏன் அகற்றக்கூடாது என்று கேட்டேன்.

அவர் சிரித்துக்கொண்டே, “பூவை உற்றுப் பாருங்கள். அது ஒரு மருவைப் போலத் தெரியவில்லையா? அதுதான் அம்மான் பச்சரிசி, மருக்களை நீக்குவதற்கான சிறந்த இயற்கை வைத்தியங்களில் ஒன்று!” என கூறினார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் கவனிக்காமல் விட்ட ஒன்று சக்திவாய்ந்த குணப்படுத்தும் பண்புகளைக் கொண்ட ஒரு தாவரமாக அந்த தருணம் எனக்கு தோன்றியது, மற்றும் அந்த அம்மான் பச்சரிசியின் மருத்துவ மதிப்பை ஆழமாக ஆராய வைத்தது. இந்த செடி பாரம்பரியமான இந்திய வீடுகளில் தலைமுறை தலைமுறையாக அமைதியாக சேவை செய்து வரும் ஒரு எளிய மூலிகைச்செடி.

உண்மையில், இது என்ன அம்மான் பச்சரிசி? அறிவியல் ரீதியாக யூபோர்பியா ஹிர்தா என்று அழைக்கப்படும் அம்மான் பச்சரிசி, சாலையோரங்களிலும், வேலிகளுக்கு அருகிலும், திறந்தவெளிகளிலும் அதிகமாக வளர்கிறது.
இந்த தாவரத்தை, இயற்கையானது நமக்கு பாதுகாப்பு மற்றும் குணப்படுத்தலுக்காக கொடுத்துள்ளது என்ற நம்பிக்கை கிராமத்து மக்களிடம் இருப்பதால் இது அம்மன் (தெய்வம்) பச்சரிசி என்றும் அழைக்கப்படுகிறது.
இது ஒரு பொதுவான களை போல தோன்றினாலும், சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இது ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. .அம்மான் பச்சரிசியின் மருத்துவ பயன்களைப் பார்ப்போம்.
1. இயற்கை மருக்கள் நீக்கி:
இயற்கையாகவே மரு போல இருக்கும் மலர்களைக் கொண்ட அந்த சின்னஞ்சிறு பூச்செடியிலிருந்து வரும் வெள்ளைப் பால் போன்ற சாற்றை, மரு மற்றும் முட்டுக்கால் மீது பூச வேண்டும். தொடர்ந்து இதை பயன்படுத்துவதால், மரு அல்லது முட்டு உலர்ந்து சுருங்கி, இயற்கையாகவே உதிர்ந்து விடும். இதை அறியாமல், மக்கள் லேசர் சிகிச்சையை நாடுகிறார்கள்.
2. தோல் வியாதிகளுக்கு நிவாரணம்:
இந்தச் செடியின் சாறு தோல் அரிப்பு (Eczema), வட்டப்புண் (Ringworm), பூஞ்சை தொற்றுகள், சிறிய காயங்கள் மற்றும் சீத்தை (boils) போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது:
அம்மான் பச்சரிசி செடியானது உங்கள் கொல்லைப்புறத்திலிருந்து கிடைக்கும் ஒரு மருத்துவ மூலிகை செடியாகும். இது பெரும்பாலும் ரசாயன கிரீம்களை விட மென்மையானது.
3. சுவாச பிரச்சனைகளுக்கு நிவாரணம்:
இந்தச் செடியின் வேகவைத்த இலைகள் அல்லது இந்த தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் கஷாயமானது ஆஸ்துமா அறிகுறிகளை குறைக்கவும், மூச்சுக்குழாய் அழற்சியைத் தணிக்கவும், இருமல் மற்றும் மூச்சுத்திணறலைக் குறைக்கவும் பயன்படுகிறது.
பருவகால மாற்றங்களின் போது காற்று கனமாகி சுவாசம் இறுக்கமாக உணரும்போது இதன் கஷாயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
4. செரிமானத்தை ஆதரிக்கிறது:
சிறிய அளவில் இந்த அம்மான் பச்சரிசியை உட்கொள்ளும்போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் பிடிப்பைத் தணிக்கிறது.
இது ஒரு லேசான மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. (சரியான வழிகாட்டுதல் இல்லாமல் ஒருபோதும் எடுத்துக்கொள்ள வேண்டாம்)
5. சிறுநீர் பிரச்சனைகளுக்கு நிவாரணம்:
இந்த தாவரத்தின் சில துளி சாற்றை தண்ணீரில் கலந்து குடித்தால் சிறுநீர் பாதை நோய்த்தொற்று குணமாகும், மேலும் இது சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
6. பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவக்கூடும்:
சில பாரம்பரிய நடைமுறைகளில், சிறிய அளவில் இந்த தாவர சாற்றை குடிக்கும் போது புதிய தாய்மார்களுக்கு, தாய்ப்பாலை அதிகரிக்க உதவும் என்று நம்பப்படுகிறது. (மீண்டும், சரியான வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே.)
பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
வெளிப்புற பயன்பாடு:
இந்த செடியிலிருந்து வரும் வெள்ளைப் பால் போன்ற சாற்றை, மரு மற்றும் முட்டுக்கால் பிரச்சினைக்கும், தோல் நோய் தொற்றுகளுக்கும் நேரடியாகப் பூசலாம்.
உள் பயன்பாடு:
சிறிய அளவில் எப்போதும் தகுதிவாய்ந்த சித்த அல்லது ஆயுர்வேத பயிற்சியாளரின் மேற்பார்வையின் கீழ் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.
“இயற்கை” என்றால் “தீங்கற்றது” என்று ஒருபோதும் கருத வேண்டாம். அம்மான் பச்சரிசியில் அதிக அளவுகளில் நச்சுத்தன்மையுள்ள சேர்மங்கள் உள்ளன. வெளிப்புற பயன்பாட்டிற்கு இதை நீங்கள் முயற்சி செய்யலாம். உண்மையில், தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினர் நமது பண்டைய ஞானத்தைப் புரிந்துகொண்டு பாராட்ட வேண்டும் என்பதற்காகவே இதைப் பகிர்கிறேன்!
ஆம், சில நேரங்களில், களை போல தோற்றமளிப்பது உண்மையில் ஒரு புதையலாகக் கூட இருக்கலாம்.
அம்மான் பச்சரிசி இயற்கையின் அத்தகைய ஒரு பரிசு. வேலியின் அருகே அமைதியாக வளர்கிறது, எதையும் கேட்கவில்லை, ஆனால் நோய்களை குணப்படுத்த தயாராக உள்ளது.
அடுத்த முறை நீங்கள் அதைப் பார்க்கும்போது, நமது மண்ணில் மறைந்திருக்கும் ஞானத்தைப் பாராட்ட ஒரு கணம் ஒதுக்குங்கள்.
